நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்… காவல் நிலையத்தில் புகார்
சென்னை அண்ணா நகரில் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (26-09-2022) இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷால் வீட்டை தாக்கினர்.
நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது-
சென்னை அண்ணா நகரில் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (26-09-2022) இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷால் வீட்டை தாக்கினர்.
அதற்கு ஆதாரமாக எங்களுடைய இல்லத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும், இந்த புகாரில் இணைத்துள்ளோம். எனவே இந்த புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்டு விஷால் இல்லத்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் தற்போது துப்பறிவாளன், மார்க் ஆன்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் லத்தி படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.
விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்களான வீரமே வாகை சூடும், எனிமி, சக்ரா, ஆக்சன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. லத்தி படத்தின் டீசர் வரவேற்பை பெற்றுள்ளது. துப்பறிவாளன் முதல் பாகம் பிரமாண்ட வெற்றியை பெற்றிருப்பதால் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.