பஸ் ஸ்டாண்டில் பள்ளி மாணவிக்கு தாலிக்கட்டிய கல்லூரி மாணவன் – வைரலாகும் வீடியோ
Chidambaram | இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிதம்பரம் பேருந்து நிழற்குடையில் அமர்ந்தபடி பள்ளி மாணவியும் கல்லூரி மாணவனும் தாலி கட்டிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிதம்பரம் காந்தி சிலை அருகே பேருந்து நிழற்குடை உள்ளது. இந்த பேருந்து நிழற்குடையிலிருந்து சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவிகள், மாணவர்கள் தங்களது பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பள்ளி சீருடையிலும், பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் கல்லூரி சீருடையிலும் பேருந்து நிலையத்தில் அமர்ந்த படி தாலி கட்டிக் கொண்டுள்ளனர்.
இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சிதம்பரம் நகர பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.