26.5 C
New York
Friday, July 26, 2024

Buy now

spot_img

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்றவர்களுக்கு 100 percent தள்ளுபடி – அமைச்சர் ஐ.பெரியசாமி

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்றவர்களுக்கு 100 percent தள்ளுபடி – அமைச்சர் ஐ.பெரியசாமி

Gold advance : 5 சவரனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100 சதவீதம் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.


கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் காரணமாக தகுதியான நபர்களை கண்டறிவதற்காக நகை கடன் பெற்றவர்களின் பெயர் உள்ளட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.


இதற்காக, கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான ஆய்வு செய்யப்பட்டன.


இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.


அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100 percent நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், 14 லட்சத்து 40,000 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.


இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), Daily Employment News (தினசரி வேலை வாய்ப்பு), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் தினத்துளிகள் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles