23.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

ஒருமுறை முதலீடு செய்தால் போதும் | ஆண்டுக்கு ரூ.29,000 பெறலாம் | அசத்தல் திட்டம்

ஒருமுறை முதலீடு செய்தால் போதும் | ஆண்டுக்கு ரூ.29,000 பெறலாம் | அசத்தல் திட்டம்


நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களை தபால் அலுவலகம் வழங்கி வருகிறது.. அதில் ஒன்று தான் மாதாந்திர வருமானத் திட்டமாகும். (Month to month Income Scheme).. மற்ற அனைத்து சேமிப்புத் திட்டங்களை விட, மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திட்டமாக இது கருதப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.. 5 ஆண்டுகள் நிறைவடையும் போது, உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட மாதாந்திர வருமானம் கிடைக்கும்.. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய, ஒருவர் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்ட விண்ணப்ப படிவத்தை நிரப்ப நீங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.

உங்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை வழங்க வேண்டும். தனிநபர் நாமினியின் பெயரையும் குறிப்பிட வேண்டும். இந்தக் கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்ச இருப்பு ரூபாய் 1,000 ஆகும், அதை நீங்கள் பணம் அல்லது காசோலை மூலம் செலுத்தலாம். திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் என்றாலும், நீங்கள் அதை முடித்தவுடன், முதிர்வு காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.

இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டம் என்பதால், உங்கள் பணத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. யாருக்காவது பணம் தேவைப்பட்டாலோ அதை திரும்பப் பெற வேண்டும் என்றால், அவர்கள் அதை எடுக்கலாம்.. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு பணம் எடுக்க வேண்டும். இந்த விதிகளின் படி, ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடங்களுக்குள் பணம் எடுக்கப்பட்டால், வைப்புத்தொகையின் 2 சதவிகிதம் திருப்பித் தரப்படும்.

கணக்கு தொடங்கிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுக்கு முன் எந்த நேரத்திலும் நீங்கள் பணம் எடுத்தால், உங்கள் டெபாசிட்டில் 1 சதவீதம் கழித்தபின் திருப்பித் தரப்படும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.. இந்த திட்டம் ஒரு கூட்டு கணக்கு வசதியையும் வழங்குகிறது.. எனவே இந்த திட்டத்தில் 2 அல்லது 3 பேர் ஒன்றாக இணைந்து கணக்கு தொடங்கலாம். இந்தக் கணக்கிற்கு ஈடாக பெறப்பட்ட வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரு கூட்டு கணக்கை ஒற்றை கணக்காக மாற்றலாம். அதே போல் தேவைப்பட்டால், ஒற்றை கணக்கை கூட்டு கணக்காக மாற்றலாம்.. இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை உங்களுக்கு சிறந்த மாத வருமானத்தை அளிக்கும்.

தனிநபர் கணக்கில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ .4.5 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ.9 லட்சம் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒற்றை கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், மாதாந்திர வருமான திட்டத்தில் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்வதற்கு ஆண்டுக்கு ரூ.29,700 வட்டி கிடைக்கும். கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, இந்த திட்டத்தில் ரூ .9 லட்சம் முதலீடு செய்தால் வருவாய் ரூ.59,400 ஆக இருக்கும். இப்போது, நீங்கள் வருடாந்திர தொகையை மாதாந்திர அடிப்படையில் கணக்கீடு செய்தால், மாதத்திற்கு ரூ.4,950 மாத வருமானம் கிடைக்கும்.. தபால் அலுவலகம் அல்லது ECS இல் இருக்கும் சேமிப்புக் கணக்கில் தானியங்கு கிரெடிட் (auto credit) மூலம் வட்டியை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.. The post ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. ஆண்டுக்கு ரூ.29,000 பெறலாம்.. அசத்தல் திட்டம்…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles